श्रीः
॥ गुरु-चन्द्र-कला-स्तुतिः ॥
वेधो·हरी·श्वर-श्लाघ्यं` काञ्चीपुर-निवासिनम् ।
हर-पूजा-प्रियं वन्दे` गुरुं शान्ति-प्रदायकम् ॥ १ ॥
ப்ரஹ்மா விஷ்ணு மஹேச்வரர்களால் பாராட்டப்பட்டவரும், காஞ்சீபுரத்தில் வஸிப்பவரும், சிவனாரை பூஜிப்பவதில் ஆர்வமுள்ளவரும், ஶாந்தி அளிப்பவருமான குருவை வணங்குகிறேன்.
अभ्यर्थनात् सुर-विरिञ्चि-रमाधवानां`
त्यक्त्वो¯दितो¯वट-तरु-स्थल-मौन-योगम् ।
विश्वे·श्वरो¯जन-हिता·चरणे पुरस्तात्`
सम्भूत¯आन्तर-सुखं स¯गुरुर्¯ददातु ॥ २ ॥
ப்ரஹ்மா விஷ்ணு (முதலிய) தேவர்களால் வேண்டப்பட்டு ஆலமரத்திடத்தில் (செய்துவந்த) மௌன யோகத்தை விட்டு, மக்களுக்கு நல்லது செய்வதற்கு முன்னிற்கக் கிளம்பி, பிறப்பெடுத்த உலகிற்கீஶ்வரரான அந்த (ஶங்கர) குரு உள்ளிருக்கும் (ஶாஶ்வத) ஸுகத்தைக் கொடுப்பாராக.
प्राग् यद् वधेन कृत¯मासुर-धर्मणां तत्`
दुर्धी-परिष्करणतोऽखिल-लोक-गुप्त्यै ।
धत्ते कलौ प्रिय-हितैर्¯वच·आयुधैः सः`
देष्टा पुरोऽस्तु घृणयाऽऽप्लुत-वीक्षणो¯मे ॥ ३ ॥
முன்பு (அவதாரங்களில்) அஸுர குணம் உடையவர்களைக் கொன்று முழு உலகையும் காப்பதற்கு எது செய்யப்பட்டதோ அதைக் கலியில் ப்ரியமாகவும் ஹிதமாகவும் பேசுவதென்ற வாக்கு(வடிவமான) ஆயுதங்களால் துஷ்ட (அஸுர) எண்ணங்களைத் திருத்துவதன் மூலம் நடத்துகிறார். கருணையால் நிரம்பிய பார்வையை உடைய அந்த குரு என் முன் இருப்பாராக!
मार्ग-च्युता·ज्ञ-जनतां दयया विलोक्य`
देहा·तिगो¯भसित-भूषित-चारु-देहः ।
नारायण-स्मरण-पूरित-भक्त-वाञ्छः`
सुप्रीति¯मावहतु मोह-मदा·दि-हन्ता ॥ ४ ॥
பாதை தவறிய அஞ்ஞானிகளான மக்களைக் கருணையுடன் பார்த்து உடலுக்கு அப்பாற்பட்டவரானாலும் திருநீறு பூசிய அழகிய உடலுடன் (வந்து) நாராயண ஸ்மரணம் செய்வதால் பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்று (முக்கிய நோக்கமாக அவர்களது) மோஹம் மதம் முதலிய (தோஷங்களைப்) போக்குபவர் நிரந்தர ப்ரியமான (ஆத்ம ஆனந்தத்தை) வருவிப்பாராக!
विश्वस्य देशिक¯उदस्त-समस्त-शोकः`
कारुण्य-वार्धि¯रिति नामभि¯रङ्कितानि ।
स्तोत्राणि यस्य यतिभिर्¯बहु-विद्-बुधैश्¯च`
गीतानि राड्भि¯रपि मङ्गल-दं भजे तम् ॥ ५ ॥
எவரை உலகிற்கெல்லாம் ஆசான், அனைத்து வருத்தங்களையும் கடந்தவர், கருணைக் கடல் என்பதுபோன்ற சொற்கள் பொருந்திய ஸ்தோத்ரங்களால் துறவறத்தாரும் பலவுமறிந்த பண்டிதர்களும் அரசர்களும் கூட பாடினார்களோ மங்களத்தை அளிக்கும் அவரை வழிபடுகிறேன்.
ग्रन्थो·पदेश-भगवत्-स्तवनानि सत्य-`
सन्·दर्शका¯न्यखिल-भूत-हिताय यस्य ।
वक्त्रो·द्भवानि जनता¯मुदिताः पठन्ति`
तं विश्व-देशिक¯मजस्र¯मभिष्टवीमि ॥ ६ ॥
எவரது திருமுகத்திலிருந்து உலகனைத்திற்கும் நன்மை பயக்கவும் சத்திய (தத்துவத்தை) நன்கு காட்டவும் உதித்த (உயர்ந்த) நூல்கள், (எளிய) உபதேசங்கள், பகவத் துதிகளை மக்கள் மகிழ்வுடன் ஓதுகின்றார்களோ அந்த ஜகத்குருவை தினந்தோறும் போற்றிப்பரவுகின்றேன்.
आगच्छ तिष्ठ सुख¯मास्स्व कि¯मत्र नूत्नं`
भद्रं शुभं भवतु मा भय¯मस्तु मै¯वम् ।
तद्-भ्रू-करा·ङ्गुलि-गते·ङ्गित-रूप-भेदाः`
मन्द-स्मितै·क-शिखराः सुख-दा¯भवन्तु ॥ ७ ॥
“வா, இரு, சௌகரியமாக உட்கார், இப்போது புதியதாக என்ன?, நல்லது, மங்களமாகட்டும், பயம் வேண்டாம், அப்படி செய்யாதே” இப்படி புருவம், கை, விரல்களின் இங்கிதத்தால் (குருநாதர் எடுக்கும்) பலவித வடிவங்கள் – அனைத்துக்கும் மேல் மந்தஹாஸம் – இவை (நமக்கு) ஸுகமளிப்பவையாக இருக்கட்டும்…
सा·र्धे सहस्र-युगला·त्मक-वर्ष-काले`
आवर्तिता¯बहु-विधा·र्तिषु संसृति-स्थाः ।
यत्-सत्-पथा·नुसरणात् सुख¯मापु¯रग्र्यं`
तं त्वाऽऽदि-देव¯मवतीर्ण¯मुपैमि भक्त्या ॥ ८ ॥
இரண்டரையாயிரம் வருடங்கள் (தாண்டிய) காலத்தில் பலவித துக்கங்களில் உழன்ற ஸம்ஸாரிகள் எவரது நற்பாதையைப் பின்பற்றியதால் உயர்ந்த ஸுகத்தை அடைந்தாரோ அத்தகைய அவதாரம் செய்த ஆதி தேவனனான உம்மை பக்தியுடன் நாடுகிறேன்.
मानुष्य-धर्म-वशतो¯वपु¯रन्य¯दन्यत्`
आस्थाय चित्र-समयो·चित-यत्न-भेदैः ।
एकः स¯शङ्कर-गुरुर्¯य¯उवाह धर्मं`
गोप्ता स¯मां समभिरक्षतु सर्व-दिग्भ्यः ॥ ९ ॥
(குறிப்பிட்ட காலம் தான் உடல் இருக்கும் என்பதாகிய) மனித இயல்பு காரணமாக (அடுத்தடுத்த குருபரம்பரையாகிய) வேறு வேறு சரீரத்தை எடுத்து விதவிதமான காலங்களுக்கு ஏற்ற விதவித ப்ரயத்னங்களால் எந்த ஒரே ஶங்கர குரு தர்மத்தைத் தாங்கிப்பிடித்தாரோ, ரக்ஷகராகிய அவர் அனைத்து திக்குகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாராக!
पुण्यं चरित्र¯मवनीं परिशोध्य काञ्ची-`
श्रीचक्र-सर्व-वि·दलङ्कृति-संलया·न्तम् ।
यस्य स्मृतं हरति पाप¯मुपार्जितं द्राक्`
श्रेयः प्रयच्छति च सर्व¯ममुं भजेऽहम् ॥ १० ॥
பூமியை (தனது ஸஞ்சாரத்தால்) தூய்மைப்படுத்தி காஞ்சியில் ஶ்ரீசக்ர (ப்ரதிஷ்டை), ஸர்வஜ்ஞ (பீடம்) அலங்கரித்தது, (ஜோதி வடிவமாக) லயமடைந்தது வரையிலான எவரது சரித்ரம் நினைவில்கொள்வதால் சேர்த்திருக்கும் பாபத்தைக் கடிது தொலைத்து அனைத்து நன்மையையும் பயக்குமோ அவரை நான் வழிபடுகிறேன்.
यत्-पूजन-स्तुति-नमस्कृति-तोषिताः स्युः`
ब्रह्मा·त्मजा·दि-मुनयः पर-बोध-दक्षाः ।
गीर्·मा-शिवा·दि-पतयः सुत-वर्ग-युक्ताः`
तं ब्रह्म मूर्तिम¯दहं शरणं प्रपद्ये ॥ ११ ॥
எவரை பூஜித்து துதித்து வணங்குவதால் பர தத்துவத்தை உணர்வது/உணர்த்துவதில் திறம்பெற்றவர்களான (ப்ரஹ்ம வித்யா ஸம்ப்ரதாய குருமார்களான) வஸிஷ்டர் முதலிய முனிவர்களும், (பிள்ளையார் முதலிய தத்தம்) புத்ரர்கள் (மற்றும்) பார்ஷதர்களுடன் கூடியவர்களான ஸரஸ்வதி-லக்ஷ்மீ-அம்பிகை முதலிய தேவிகளின் கணவன்மார்கள் (அந்த தேவிகளுடனும் சேர்ந்து) மகிழ்வார்களோ, (குரு꞉ ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம என்றவாறு) வடிவமெடுத்த பரம்பொருளான (அந்த குருவை) நான் அடைக்கலம் புகுகிறேன்.
संसार-मध्य-दृढ-लग्नतयाऽवसन्नाः`
ईर्ष्या·दि-जा·भिचरणा·दि-कुकृत्य-विद्धाः ।
यस्य प्रपद्य चरणौ विपदस्¯तरन्ति`
शश्वत् स¯मे गुरु-वरो¯हृदि सन्निधत्ताम् ॥ १२ ॥
ஸம்ஸாரத்தினூடே திடமாக மாட்டிக்கொண்டு அவதியுற்றவர்களும், பொறாமையால் முதலியதால் ஏற்பட்ட அபிசாரம் முதலிய துஷ்ட செயல்களால் பாதிக்கப்பட்டவர்களும் எவரது திருவடிகளை நாடியதால் விபத்துக்களைக் கடப்பார்களோ அந்த சிறந்த குருநாதர் எனக்கு எப்பொழுதும் ஹ்ருதயத்தில் நிலைத்திருப்பாராக!
लोको·त्थ-दुःख-निवहे परिवर्तमानः`
कारुण्य-लेश-रहितै¯रकृतो·पकारः ।
यत्-पाद-पूजन¯मुपैमि “ममा¯विता¯यम्”`
इ¯त्येक¯एव शरणं स¯भवेत् प्रसन्नः ॥ १३ ॥
உலகில் ஏற்படும் துக்கத்திரள்களில் இங்குமங்கும் அல்லலுற்று சிறிதும் கருணையற்றவர்களால் உபகாரம் செய்யப்படாமல் போய் “இவர் ஒருவரே நம்மைக் காப்பவர்” என்று எவரது திருவடிகளை பூஜிக்க முற்படுகிறேனோ அவர் மலர்ந்த முகத்துடன் எனக்கு அடைக்கலம் ஆவாராக!
अज्ञान-कृत्य-सुदृढीकृत-बन्ध-मोक्षः`
कामा·दि-दर्प-दलनाद् वयुना·भियोगः ।
भक्त्याऽन्वितैर्¯द्रुत¯मलभ्यत यत्-प्रसादात्`
अर्भस्य मेऽपि कृपया स¯शुभं करोतु ॥ १४ ॥
அறியாமையால் (செய்த) செயல்களால் திடப்பட்ட (ஸம்ஸார) பந்தத்திலிருந்து விடுதலையும், காமம் முதலியவற்றில் திமிர் அடங்கி ஞானம் ஏற்படுவதும் எவரது அருளால் பக்தியுடையவர்களுக்கு சடுதியில் கிடைத்ததோ, குழந்தையாகிய எனக்கும் கருணையுடன் அவர் (அந்த) மங்களத்தைச் செய்யட்டும்.
क्रोधा·दयो¯मयि पुनःपुन¯रुत्थिता¯ये`
पुण्यस्य लेश¯मपहर्तु¯मुदीरते ते ।
यत्-सेवनेन नितरां स्यु¯रितोऽवधूताः`
तं संसृतेर्¯भिषज¯मुत्तम¯मानतोऽस्मि ॥ १५ ॥
கோபம் முதலிய எவை என்னிடம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு (நான் சம்பாதித்திருக்கும்) சிறிதளவு புண்ணியத்தை அபஹரிக்க கிளம்புகின்றனவோ, எவரை சேவிப்பதால் அவை இங்கிருந்து அறவே விரட்டியடிக்கப்படுமோ, ஸம்ஸாரத்தின் சிறந்த மருத்துவரான அவரை நான் வணங்குகிறேன்.
य¯च्चित्त-निग्रह-बलेन महा-प्रयत्नात्`
साक्षात्-कृतं कतिभि¯रप्यति-धीर-वर्गैः ।
बालोऽह¯मि¯त्यपि पतन् गुरु-पादुका·न्ते`
आ¯श्वाप्नवानि करुणा·कुल-दृष्टि-पुष्टः ॥ १६ ॥
மிகவும் தீரர்களான சில (மஹான்களின்) குழாம்களால் மிகுந்த ப்ரயத்னத்துடன் மனதை அடக்கிய வலிமையால் எந்த (பரம்பொருள்) நேரில் அறியப்பட்டதோ, நான் (அதையெல்லாம் செய்யவியலாத) சிறுவன் என்ற (நினைவுடன்) குரு பாதுகையருகே (தெண்டனிட்டு) விழுவதாலேயே (பாவம் குழந்தை நமஸ்கரிக்கிறது என்ற அவரது) கருணை ததும்பும் பார்வையின் பலத்தால் (அந்த பரம்பொருளை) சீக்கிரத்திலேயே அடைவேனாக!
“देष्टः प्रपद्य"¯इति मन्त्र-विदः प्रपन्नान्`
उद्बोध्य सर्व-जननेषु कृतं विशोध्य ।
बुद्ध्वा च तद्-विनयितां प्रतनं नयन्तम्
आकाश¯मार्य-वर-शङ्कर¯माश्रयेऽहम् ॥ १७ ॥
“குருநாதா சரணம்” என்ற மந்த்ரத்தை அறிந்து நாடியவர்களுக்கு விவேகம் (முதலியவற்றை) அளித்து அனைத்து பிறவிகளிலும் செய்ததைப் போக்கி அவர்கள் பணிவுடன் இருப்பதை அறிந்து ப்ராசீனமான (ஶாஶ்வதமான) ஆகாஶம் போன்று (ஸூக்ஷ்மமானதான பரம்பொருளிடம்) அழைத்துச் செல்லும் சிறந்த ஆசானான ஶங்கரரை நான் அண்டுகிறேன்.
देश-कालेषु दुष्टेषु गुरु-चन्द्र-कला-स्तुतिः ।
तद्-भक्तै¯रनुसन्धेया चित्ते तत्-स्मृति-लब्धये ॥ १८ ॥
(குரு தரிசனம் கிடைக்கவியலாத) துஷ்டமான தேச கால (சூழ்நிலைகளில்) சந்த்ரனின் (பதினாறு) கலைகள் (போல் பதினாறு செய்யுள்கள் உள்ளடங்கிய) குருவின் துதியானது அவரது நினைவு மனதில் கிடைக்கும்பொருட்டு ஓதப்படவேண்டும்.
॥ इति काञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा श्रीमदप्पय्यदीक्षितेन्द्रप्रणतिपूर्वकं विरचिता गुरुचन्द्रकलास्तुतिः ॥