praatahsmaranam



श्रीः

॥ श्री-गुरु-प्रातः-स्मरणम् ॥

प्रातः स्मरामि गुरु-नाथ-मुखा·रविन्दम्

अन्तः-स्थिता·न्त-रहिता·त्म-सुख-प्रफुल्लम् ।

धर्मस्य रक्षण-विधौ सु-कृतो·पदेशं

शिष्या·र्ति-शामक-सुधा-प्लुत-वाङ्-निगुम्फम् ॥ १ ॥

உள்ளிருக்கும் அளவற்ற ஆத்மஸுகத்தினால் (எப்பொழுதும்) மலர்ந்ததும், தர்மத்தைக் காப்பாற்றும் காரியத்தில் நன்று முயன்று உபதேசம் செய்வதும், சிஷ்யர்களின் துக்கங்களை சமாதானம் செய்யும் அமிழ்தில் ஊறிய சொற்றொடர்களைக் கொண்டதுமான குருநாதரின் முகக்கமலத்தை (இந்த) காலை வேளையில் நினைவுகொள்கிறேன்.

प्रातर्·भजे भय-हरं गुरु-देव-हस्तं

कामाक्षि-कुङ्कुम-सुमङ्गल-वर्ण-भूषम् ।

भक्तेषु दातुम् उदितं क्लम-दुःख-हीनं

ज्ञाना·न्त-सर्व-फल-शेवधिम् आश्रितानाम् ॥ २ ॥

பயத்தை நீக்குவதும், காமாக்ஷியைப் (பூஜிக்கும்) குங்குமத்தினால் அழகிய மஞ்சள் நிறத்தால் பொலிவதும், பக்தர்ளிடம் (நிறைய) கொடுக்க (எப்பொழுதும்) உயர்ந்திருப்பதும், சோர்வோ சிரமமோ கருதாததும், அண்டியவர்களுக்கு ஞானம் வரையிலான பலன்களின் நிதியானதுமான குருதேவரின் கரத்தை (இந்த) காலை வேளையில் போற்றுகிறேன்.

प्रातर्·नमामि गुरु-पाद-युगं विशुद्धं

काञ्ची-स्थितं जन-हिताय कृत-प्रयाणम् ।

यत्-सङ्गि-धूलि-कण-भक्ति-भृताम् अघौ·घात्

क्लेशा·च्च जीवन-गता·ज्जनना·च्च मुक्तिः ॥ ३ ॥

பரிசுத்தமானதும், காஞ்சீபுரத்தில் இருப்பதும், மக்களின் நலனுக்காக ப்ரயாணம் செய்வதும், எதனிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு தூளியின் துகள் மீது பக்தி பூண்டவருக்கு பாபங்களினின்றும், வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களினின்றும், வாழ்க்கை (சுழற்சி)யிலிருந்தும் விடுதலை (கிடைக்குமோ) அத்தகையதுமான குருவின் இரு திருவடிகளையும் (இந்த) காலை வேளையில் வணங்குகிறேன்.

गुरौ प्रसन्ने ना·लभ्यं न क्षेम·श्च गुरुं विना ।

प्रातः सायं दिवा रात्रौ सदा तस्माद् गुरुं स्मरेत् ॥ ४ ॥

குரு மகிழ்ந்தால் கிடைத்தற்கரியது (ஒன்றும்) இல்லை. (கிடைத்தது நிலைப்பது என்ற) க்ஷேமம் குருவின்றி இல்லை. ஆகவே காலையில், மாலையில், பகலில், இரவில், எப்பொழுதும் குருவை நினைவில் கொள்ளவேண்டும்.

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा विरचितं गुरु-प्रातः-स्मरणम् ॥

-o-